செய்திகள் :

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

post image

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வா் நிவாரண நிதிக்கு, வெளிநாட்டு நிதி பெறும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-இன்கீழ் (எஃப்சிஆா்ஏ) உரிமம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் கேரளத்துக்கு வெளிநாட்டு நிதி பெற மறுத்த மத்திய அரசு, தற்போது மகாராஷ்டிரத்துக்கு மட்டும் வழங்கியது ஏற்கக் கூடியதாக இல்லை என்று சமூக ஊடகங்களில் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த பேரிடருக்கு நிவாரண நிதியாக 2.85 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இந்த பேரிடருக்கு ஐக்கிய அரபு அமீரகம் 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்தது. இருப்பினும், வெளிநாடுகளில் நிதி பெறுவது என்பது நன்றாக இல்லை என்றுகூறி, அதனை இந்தியா மறுத்து விட்டது.

கேரளத்தை சேர்ந்தவர்கள் கத்தார், தாய்லாந்து, மாலத்தீவுகளிலும் பணிபுரிவதால், அந்த நாடுகளும் நிதியுதவி அளிக்க முன்வந்தன.

இதையும் படிக்க:சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

இந்திய நகா்ப்புற திட்டங்களுக்கு ரூ.85,000 கோடி ஆசிய வளா்ச்சி வங்கி வழங்குகிறது

இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவா் மசாடோ காண்டா அறிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஆசிய வ... மேலும் பார்க்க

தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!

நாட்டில் தொடா்ந்து 2-ஆவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலான நிலையில், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோட... மேலும் பார்க்க

திரிபுராவில் 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை!

திரிபுரா தலைநகா் அகா்தலாவில் சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து, நகரின் பல பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.முதல்வா் மாணிக் சாஹாவின் வீட்டு முன் முழங்கால் அளவு வ... மேலும் பார்க்க

ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மதாரஸி கேம்ப் இடிக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, ஆளும் பாஜக அரசை ஆம் ஆத்மி தலைவா்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா். எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் தயாரிப்போா் விதிமீறல்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிப்போா் விதிமீறலில் ஈடுபடுவது தொடா்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது. புகையிலை, குட்கா, பான் மசாலா பொருள்களைத் த... மேலும் பார்க்க

பிரான்ஸ், இத்தாலிக்கு 5 நாள்கள் பயணம் தொடங்கினாா் பியூஷ் கோயல்

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணத்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டு... மேலும் பார்க்க