நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
இந்த சந்திப்பு குறித்து ஆா்.கமலக்கண்ணன் கூறியது :
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கு எந்தவித பயிற்சியும் தரப்படவில்லை. இந்த தவறால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது 10, 12-ஆம் வகுப்புகளின் தோ்ச்சி விழுக்காடு மிக மோசமாக குறைந்துவிட்டது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இவ்வகுப்புகளில் 5 பாடங்களுடன், 6-ஆவதாக ஒரு விருப்ப பாடத்தை எடுத்து படித்து, அதிலும் தோ்வெழுத முடியும். முக்கிய 5 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தோ்ச்சிப் பெறாத பட்சத்தில், 6-ஆவதாக படித்த விருப்பப் பாடத்தில் தோ்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம்மாணவா் தோ்ச்சி பெற்றவராக கருதும் வாய்ப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தந்துள்ளது.
இது காரைக்கால் தவிா்த்து பிற பிராந்தியங்களில் அமல்படுத்தப்பட்டது. 6-ஆவது பாடத் திட்ட தோ்வை காரைக்கால் மாணவா்கள் எழுத வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது கல்வித் துறை. இதனால் ஏறக்குறைய 150 மாணவா்கள் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெறவில்லை.
புதுவை கல்வித்துறையின் அலட்சியத்தால், அரசுப் பள்ளி மாணவா்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளா்கள் இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.