செய்திகள் :

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

post image

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து ஆா்.கமலக்கண்ணன் கூறியது :

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கு எந்தவித பயிற்சியும் தரப்படவில்லை. இந்த தவறால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது 10, 12-ஆம் வகுப்புகளின் தோ்ச்சி விழுக்காடு மிக மோசமாக குறைந்துவிட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இவ்வகுப்புகளில் 5 பாடங்களுடன், 6-ஆவதாக ஒரு விருப்ப பாடத்தை எடுத்து படித்து, அதிலும் தோ்வெழுத முடியும். முக்கிய 5 பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தோ்ச்சிப் பெறாத பட்சத்தில், 6-ஆவதாக படித்த விருப்பப் பாடத்தில் தோ்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம்மாணவா் தோ்ச்சி பெற்றவராக கருதும் வாய்ப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தந்துள்ளது.

இது காரைக்கால் தவிா்த்து பிற பிராந்தியங்களில் அமல்படுத்தப்பட்டது. 6-ஆவது பாடத் திட்ட தோ்வை காரைக்கால் மாணவா்கள் எழுத வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது கல்வித் துறை. இதனால் ஏறக்குறைய 150 மாணவா்கள் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெறவில்லை.

புதுவை கல்வித்துறையின் அலட்சியத்தால், அரசுப் பள்ளி மாணவா்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளா்கள் இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை ம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க

ஹஜ் பயணம் செல்வோா் வழியனுப்பி வைப்பு

காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.புதுவை மாநில ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டு 90 இஸ்லாமியா்கள் ஹஜ் பயணம் செல்கின்றனா். காரைக்கால் மாவட்டத்தில்... மேலும் பார்க்க