செய்திகள் :

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

post image

வருகிற ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான சஞ்சய் குமார், என்.வி. அஞ்சாரியா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்துவது அதிகாரத்துடன் கூடிய தன்னிச்சையான அணுகுமுறை, இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதாவது இரண்டுமே சிரமமாகவோ அல்லது இரண்டுமே எளிதாக இருக்க முடியாது. அதனால் தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்துவது சரியல்ல' என்று கூறிய நீதிபதிகள், நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்தி முடிக்க தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தேர்வை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் தேர்வுக்கு இன்னும் 2 வாரங்கள் இருப்பதால் தேவையான தேர்வு மையங்களை ஏற்பாடு செய்து ஒரே ஷிப்ட்டில் நடத்த நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க| நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிம... மேலும் பார்க்க

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்... மேலும் பார்க்க