செய்திகள் :

MDMK: "மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தம்தான்; ஆனால்..." - துரை வைகோ சொல்வது என்ன?

post image

மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தமாகத்தான் இருக்கிறது என்று ம.தி.மு.க முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (மே 30) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

வைகோ
வைகோ

அப்போது பேசிய அவர், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34-வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்பாகப் பணியாற்றினார். பொன்குடம் உடைந்தாலும் அது பொன்குடம்தான். பாராளுமன்ற புலி வைகோ தான்.

வைகோவிற்குப் பதவி ஒரு பொருட்டல்ல. அவரது மக்கள் பணி எப்போதும் தொடரும். கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க-வின் முக்கிய உறுப்பினர்கள் சொல்லி இருந்தார்கள்.

துரை வைகோ
துரை வைகோ

மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.

தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதைக் கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். தமிழகத்தின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சீனா: "இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்..." - சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கட... மேலும் பார்க்க

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ... மேலும் பார்க்க

"நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்..." - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. "ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கி... மேலும் பார்க்க

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்க... மேலும் பார்க்க