செய்திகள் :

பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!

post image

பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவில் பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பாக்கு மட்டைத் தட்டுகள் சந்தையானது, உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 3,500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் ரூ. 2,500 கோடியாகும். இந்தியாதான், உலகின் மிகப்பெரிய `பாக்கு தட்டுகளை’ ஏற்றுமதி செய்யும் நாடாகும்.

பிளாஸ்டிக் தட்டு, டம்ளர் ஆகிய பொருள்களுக்கு மாற்றாக பாக்கு மட்டைத் தட்டுகள், கோப்பைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தத் தயாரிப்புகள், இந்தியாவில்தான் அதிகளவில் (சுமார் 600 அலகுகள்) உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றிலும், தமிழ்நாடு மற்றும் தெற்கு கர்நாடகத்திலிருந்துதான் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

இவை, அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2023, நவம்பர் முதல் 2024, அக்டோபர் வரையில் 325 வாடிக்கையாளர்களுக்கு 144 இந்திய ஏற்றுமதியாளர்கள் 3,407 (பாக்கு மட்டை பொருள்கள்) சரக்குகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பாக்கு மட்டை தட்டுகளில் இயற்கையாக நஞ்சு உருவாவதாகக் கூறி, அப்பொருள்களுக்கு அமெரிக்க அரசு தடை செய்து உத்தரவிட்டது. இதனால், இந்தியாவில் பாக்கு இலை ஏற்றுமதி பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளும் பாக்கு மட்டை பொருள்களுக்கு தடை விதித்தபோதும், இந்தியா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிம... மேலும் பார்க்க

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்... மேலும் பார்க்க