செய்திகள் :

பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி, 27 பேர் காயம்

post image

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் மற்றும் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உ.பி: அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பிரசவம்! விசாரணைக் குழு அமைப்பு!

விபத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட சுமார் 40 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்தனர். அவர்கள் பட்டாசு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு ஷிப்டை முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த வெடிப்பு ஏற்பட்டு பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டதாக தொழிலாளி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து அதிகாரி கூறுகையில், தொழிற்சாலை உரிமம் பெற்றதாகவும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து விலகி விவசாய நிலங்களில் அமைந்துள்ளது. இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். வெடி விபத்து காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிம... மேலும் பார்க்க

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்... மேலும் பார்க்க