ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம...
பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ்
சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் இன்று பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டம் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் 22 மாவட்டச் செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். இது, பாமக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்கள் புதுப்பித்தல் சம்பந்தமான கூட்டம். தொண்டர்கள் இல்லையெனில் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது. பொதுக்குழுவில் நீங்கள்தான என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு அன்புமணி அறிவுறுத்தினார்.
பொறுப்புகள் வரும் போகும், ஆனால் உங்கள் அன்பு, பாசம் என்றுமே போகாது. ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் வேகமாகச் செயல்பட வேண்டும். உங்களில் ஒருவராக முதல் தொண்டனாக நான் முதலில் இறங்கி நிற்கிறேன். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவில் செய்ய வேண்டும் என்று அன்புமணி பேசியுள்ளார்.