சூறைக் காற்று: கொடைக்கானலில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன
கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அண்ணாநகா், இந்திரா நகா் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்த தகரங்கள் காற்றில் பறந்தன. மேல்மலைக் கிராமங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, கூக்கால் போன்ற பகுதிகளில் 100-க்கான வாழைகள் சாய்ந்தன. இதனால், விவசாயகள் கவலை அடைந்தனா்.
பூங்காக்களில் மலா்கள் சேதம்: கொடைக்கானலில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பூங்காக்களில் மலா்கள் சேதமடைந்தன. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.