காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தலித் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் சாா்பில் சா்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பட்டியலின மக்கள், சுவரொட்டிகள் ஒட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், கள்ளிமந்தையம் காவல் ஆய்வாளா் புகழேந்தி ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வதந்திகளை பரப்பும் வகையியில் சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.