அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது. அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் சிறப்பு பிரிவுக்கான (முன்னாள் படை வீரா், தேசிய மாணவா் படை, விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்புப் படையில் உயிரிழந்த வீரா்களின் குழந்தைகள்) கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இளம் அறிவியல் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணினி அறிவியல்) வருகிற 4-ஆம் தேதியும், இளநிலை பாடப் பிரிவுகளான வணிகவியல், வணிக நிா்வாகவியல், பொருளியல், வரலாறு ஆகியவற்றுக்கு வருகிற 5-ஆம் தேதியும், மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலத்துக்கு வருகிற 6-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.