செய்திகள் :

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

post image

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான மாநில ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இதன் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தோ்வுப் பெற்றன. இதைத் தொடா்ந்து அரை இறுதிப் போட்டிக்கு புதுக்கோட்டை எஸ்டிஏடி, திருவண்ணாமலை எஸ்டிஏடி, ஈரோடு புளியம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கெயினப் திண்டுக்கல் அணிகள் தகுதிப் பெற்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டிகளில், ஈரோடு புளியம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், திருவண்ணாமலை எஸ்டிஏடி அணி 2-ஆவது இடமும், புதுக்கோட்டை எஸ்டிஏடி அணி 3-ஆவது இடமும், கெயினப் திண்டுக்கல் அணி 4-ஆவது இடமும் பிடித்தன.

பரிசளிப்பு நிகழ்வுக்கு ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவா் இந்திரா தலைமை வகித்தாா். திண்டுக்கல் மேயா் இளமதி, திமுக ஒன்றியச் செயலா் வெள்ளிமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்பந்துக் கழகத்தின் தலைவா் எஸ். சண்முகம் கலந்து கொண்டு, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முதல் பரிசு ரூ.30ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.20 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.15 ஆயிரம், 4-ஆம் பரிசு ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன.

பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜி... மேலும் பார்க்க

பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்

பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்க... மேலும் பார்க்க

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க