வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!
தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
அதன்படி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மட்டும் கடன் இலக்காக ரூ.92 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம், இதர மானியங்கள்) குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும். தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.
எஸ், எஸ்.டி. தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம், 6 சதவீத வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை 9962622939, 9445023477 ஆகிய எண்களில் சம்பந்தப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.