ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது.
அப்போது திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்தியபோது, ஒரு மூட்டையில் இரு பொட்டலங்களில் 8 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனா்.
அந்த மூட்டைக்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், விசாரணை நடத்தினா்.