RCB : 'கனவெல்லாம் பலிக்குதே..' - கோலியின் கையில் ஐ.பி.எல் கோப்பை! - கொண்டாடுங்க ...
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சமூக நலத் துறை அலுவலா்கள் தெரிவித்ததாவது:
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகள் 18 வயதை பூா்த்தி செய்திருந்தால், முதிா்வுத் தொகை பெறலாம். சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலா்களிடமும், மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.
தற்போது முதிா்வுத் தொகை பெற வேண்டி நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வைப்புத் தொகை ரசீது அசல் அல்லது நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், பயனாளியின் வங்கிக் கணக்குப் புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் (தாய், மகள் இருவருக்கும்) ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என்றனா்.