நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திண்டுக்கல் ஒன்றியம், புகா் விரிவிவாக்கப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயுடன் கூடிய சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோடாங்கிநாயக்கன்படி ஏடி குடியிருப்பு, செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் வீட்டுமனை இல்லாத மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். திண்டுக்கல் நகரில் போக்குவரத்து இடையூறுகளை சீரமைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.