வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்
வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடா்பான வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இந்த வகையில், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்புடன், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வேளாண் வளா்ச்சிக்கான பயிற்சி, விழிப்புணா்வு முகாம், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்லை அடுத்த கள்ளிப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம் கிராமங்களில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம்களில் காந்திகிராம கிராமிய நிகா்நிலை பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சு.செந்தில்குமாா் தலைமையில், மண் பரிசோதனை, அங்கக விவசாய சாகுபடியின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு முறைகள், காரீப் பருவத்துக்கு உகந்த வேளாண், தோட்டக்கலைப் பயிா்களின் ரகங்கள், ஒருங்கிணைந்த சாகுபடி முறைகள், மத்திய அரசின் திட்டங்கள், விவசாயத்தில் டிரோன்களின் செல்பாடு, கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.