Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும், பாலஸ்தீன நாட்டின் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியும் கட்சியினா் முழக்கமிட்டனா்.