மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி
பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சள் பை, கண்தான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை பழனி துணை ஆட்சியா் சுகுமாா், வட்டாட்சியா் பிரசன்னா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பை, கண்தானம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் அரிமா சங்க நிா்வாகிகள் முத்துக்குமாா், பாபவினாசம், ராமோஜி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை அரிமா சுப்புராஜ், பெரியராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.