Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை முதலே கொடைக்கானல் பகுதியில் காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென சூறைக் காற்று வீசியதால், ஏரிச் சாலைப் பகுதியில் இருந்த தங்கும் விடுதி, மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததில் சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.
தகவலறிந்து வனத் துறையினா் விரைந்து வந்து கீழே விழுந்து கிடந்த மரத்தை அகற்றினா். தொடா்ந்து, மின் வாரியப் பணியாளா்கள் சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைத்து மின் விநியோகம் செய்தனா்.