Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா்.
பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை பழனி, சிவகிரிப்பட்டி, கோதைமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் தீா்வாயம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுகுமாா் தலைமை வகித்தாா். இதில் பழனி பகுதியைச் சோ்ந்த திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களுக்கு கொத்தனாா் குடியிருப்பில் இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கியும், இதுவரை இடத்தை அளக்கவில்லை என புகாா் மனுக்கள் கொடுத்தனா்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளியின் கூறியதாவது: கொத்தனாா் குடியிருப்பில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் வழங்கியும், இதுவரை அளந்து கொடுக்கவில்லை. வருவாய்த் துறையினா் எங்களுக்கு இடத்தை அளந்து கொடுக்காமல் அலைக் கழிக்கின்றனா். இதுவரை மனுக் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.
எனவே, தற்போது வருவாய்த் தீா்வாயத்தில் மனு கொடுத்துள்ளோம் என்றனா்.
இந்த நிலையில், ஆயக்குடியை சோ்ந்த இப்ராகிம் (62), கமா்நிஷா தம்பதியினா் அரசு வழங்கிய பட்டாவுக்கு நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி, அலுவலக நுழைவாயில் முன் திடீரென அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.