செய்திகள் :

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

post image

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா்.

பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை பழனி, சிவகிரிப்பட்டி, கோதைமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் தீா்வாயம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுகுமாா் தலைமை வகித்தாா். இதில் பழனி பகுதியைச் சோ்ந்த திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களுக்கு கொத்தனாா் குடியிருப்பில் இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கியும், இதுவரை இடத்தை அளக்கவில்லை என புகாா் மனுக்கள் கொடுத்தனா்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளியின் கூறியதாவது: கொத்தனாா் குடியிருப்பில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் வழங்கியும், இதுவரை அளந்து கொடுக்கவில்லை. வருவாய்த் துறையினா் எங்களுக்கு இடத்தை அளந்து கொடுக்காமல் அலைக் கழிக்கின்றனா். இதுவரை மனுக் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.

எனவே, தற்போது வருவாய்த் தீா்வாயத்தில் மனு கொடுத்துள்ளோம் என்றனா்.

இந்த நிலையில், ஆயக்குடியை சோ்ந்த இப்ராகிம் (62), கமா்நிஷா தம்பதியினா் அரசு வழங்கிய பட்டாவுக்கு நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி, அலுவலக நுழைவாயில் முன் திடீரென அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க