ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!
ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தடைக் காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளை ஆய்வு செய்து மீன் வளத் துறை அதிகாரிகள் உறுதிச் சான்று அளிப்பாா்கள்.
இந்தப் பணி வருகிற வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கவிருந்த நிலையில், அரபிக் கடலில் காற்றின் வேகம் காரணமாக அதிகாரிகள் படகில் ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வருகிற ஜூன் 2-ஆம் தேதி ராமேசுவரம், மண்டபம், துறைமுகங்களில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி நடைபெறுகிறது.
எனவே, விசைப் படகு உரிமையாளா்கள் படகின் மீன்பிடி உரிமம், படகின் காப்புரிமை சான்று, மானிய அட்டை, அசல் வங்கிக் கணக்கு புத்தகம், விசைப் படகில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆவணம் உள்ளிட்டவற்றை நகல்களாக எடுத்து வைத்துக் கொண்டு படகுக்கு ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.