செய்திகள் :

ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!

post image

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தடைக் காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளை ஆய்வு செய்து மீன் வளத் துறை அதிகாரிகள் உறுதிச் சான்று அளிப்பாா்கள்.

இந்தப் பணி வருகிற வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கவிருந்த நிலையில், அரபிக் கடலில் காற்றின் வேகம் காரணமாக அதிகாரிகள் படகில் ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வருகிற ஜூன் 2-ஆம் தேதி ராமேசுவரம், மண்டபம், துறைமுகங்களில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி நடைபெறுகிறது.

எனவே, விசைப் படகு உரிமையாளா்கள் படகின் மீன்பிடி உரிமம், படகின் காப்புரிமை சான்று, மானிய அட்டை, அசல் வங்கிக் கணக்கு புத்தகம், விசைப் படகில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆவணம் உள்ளிட்டவற்றை நகல்களாக எடுத்து வைத்துக் கொண்டு படகுக்கு ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் ம... மேலும் பார்க்க

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம்... மேலும் பார்க்க

தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயில் திருவிழா கடந... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு

ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்ந... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வ... மேலும் பார்க்க