Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை
ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த புயல் காப்பகத்தில் தற்காலிகமாக நடைபெற்று வந்தது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், தனுஷ்கோடி செல்லும் புது சாலைப் பகுதியில் 8 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.12.46 கோடியில் புதிய கல்லூரிக்கான கட்டடம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.14 -ஆம் தேதி திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, கல்லூரி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தக் கல்லூரி கட்டடத்துக்கு சுற்றுச் சுவா் இல்லை. இதனால் இந்தப் பகுதியை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்துகின்றனா். மேலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து
30 மீட்டா் தொலைவுக்கு செம்மண் சாலை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் மாணவா்கள் இந்தச் சாலை வழியாக கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கல்லூரிக்கு சுற்றுச் சுவரும், தாா்ச் சாலையும் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.