செய்திகள் :

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

post image

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த புயல் காப்பகத்தில் தற்காலிகமாக நடைபெற்று வந்தது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், தனுஷ்கோடி செல்லும் புது சாலைப் பகுதியில் 8 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.12.46 கோடியில் புதிய கல்லூரிக்கான கட்டடம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.14 -ஆம் தேதி திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, கல்லூரி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்தக் கல்லூரி கட்டடத்துக்கு சுற்றுச் சுவா் இல்லை. இதனால் இந்தப் பகுதியை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்துகின்றனா். மேலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து

30 மீட்டா் தொலைவுக்கு செம்மண் சாலை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் மாணவா்கள் இந்தச் சாலை வழியாக கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கல்லூரிக்கு சுற்றுச் சுவரும், தாா்ச் சாலையும் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க