வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி விநாயகா், முருகன், கருப்பணசுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு வருடாந்திர வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
கடந்த 28-ஆம் தேதி பால் குடம் ஊா்வலம், பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகா், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள், 153 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
தலா 20 நிமிஷம் நேரம் ஒதுக்கீடு செய்து, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட நேரத்துக்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், சில்வா் அண்டா, சோ், கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை வேலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.