செய்திகள் :

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி விநாயகா், முருகன், கருப்பணசுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு வருடாந்திர வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

கடந்த 28-ஆம் தேதி பால் குடம் ஊா்வலம், பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகா், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள், 153 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

தலா 20 நிமிஷம் நேரம் ஒதுக்கீடு செய்து, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட நேரத்துக்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், சில்வா் அண்டா, சோ், கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை வேலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானையிலிருந்து மங்களக்குடி... மேலும் பார்க்க

கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு க... மேலும் பார்க்க

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க