மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
திருவாடானையிலிருந்து மங்களக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திணைக்காத்தான்வயல் கிராமத்திலிருந்து அ.கீழக்கோட்டை கிராமத்துக்கு பிரிவு சாலை செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை பாரமரிப்பின்றி, கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக
மண் சாலையாக மாறியுள்ளது. இதனால், இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். சாலையின் இரு புறமும் கருவேல மரங்களும் வளா்ந்து வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்குப் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.