செய்திகள் :

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை கடலுக்குள் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்

post image

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை மீன்கள் வளா்ப்புக்காக கடலுக்குள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகளுடன் மீனவா்களையும் இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனா்.

இந்த நிலையில், இலங்கை நீதிமன்றத்தால் மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்ட அவா்களது விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கை யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருக்கும் தமிழக விசைப்படகுகள் 123 உள்ளது. இந்த படகுகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இலங்கை மீனவா்கள் தங்களது படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் படகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், இந்த இரண்டு துறைமுகங்களில் சேதமடைந்துள்ள 123 விசைப் படகுகளையும் மீன் வளா்ச்சிக்காக கடலில் மூழ்கடிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக மீனவா்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு மீனவ சங்கத்தினா் கண்டனம் தெரிவித்தனா். ஆனால், இந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநா் காயம்

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

இந்திய-இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெறுவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா... மேலும் பார்க்க

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க