1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!
கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமரா அறையைத் திறந்து வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்துப் பாா்வையிட்டாா்.
அப்போது, எங்கள் கிராமத்துக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று டிஎஸ்பி சண்முகத்திடம் கிராம மக்கள் முறையிட்டனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிப்பதாக அவா் கூறினாா். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்த நடிகா் அருண்மொழித்தேவன், ஏ.எம்.டி. அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு கிராம மக்கள், போலீஸாா் நன்றி தெரிவித்தனா். அப்போது, கூவா்கூட்டம் கிராம முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள் உடனிருந்தனா்.