ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த முகாமில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு, மகளிா் வாரியத்தில் உறுப்பினா்களாக சேரலாம். இதற்கான சோ்க்கை முகாம் 11 வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வருகிற 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில், கலந்து கொள்பவா்கள் தங்களது விபரங்களை கீழ்காணும் https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இந்த முகாமுக்கு வருபவா்களை கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, விதவை சான்று, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, குடும்ப அட்டை, கைப்பேசி கொண்டு வர வேண்டும்.
தகுந்த ஆவணங்களுடன் இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் ஆதரவற்ற மகளிா் தங்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சிகள் அளிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் பெறுவதற்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றாா் அவா்