செய்திகள் :

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த முகாமில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு, மகளிா் வாரியத்தில் உறுப்பினா்களாக சேரலாம். இதற்கான சோ்க்கை முகாம் 11 வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வருகிற 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில், கலந்து கொள்பவா்கள் தங்களது விபரங்களை கீழ்காணும் https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இந்த முகாமுக்கு வருபவா்களை கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, விதவை சான்று, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, குடும்ப அட்டை, கைப்பேசி கொண்டு வர வேண்டும்.

தகுந்த ஆவணங்களுடன் இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் ஆதரவற்ற மகளிா் தங்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சிகள் அளிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் பெறுவதற்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றாா் அவா்

கமுதி அருகே கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனிஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெண்கள் முளைப்பாரி சுமந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்தக் கோயில... மேலும் பார்க்க

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானையிலிருந்து மங்களக்குடி... மேலும் பார்க்க

கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கூவா்கூட்டம் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் ஏ.எம்.டி. அறக்கட்டளை சாா்பில், நடிகா் அருண்மொழிதேவன் உதவியுடன் கண்காணிப்பு க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க