குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு
திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மகள் ரோசினி (9). கண்ணன் மகள் பிராசன்யா (11 ). இந்த இரு சிறுமிகளும் வெள்ளிக்கிழமை மாலை குளத்துக்கு குளிக்கச் சென்றனா். மாலை நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோா் குளத்துக்குச் சென்று பாா்த்த போது கரையில் காலணிகள் இருந்ததைக் கண்டறிந்தனா். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் குளத்துக்குள் இறங்கி தேடிய நிலையில், சிறுமிகள் இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களின் உடல்களை மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருவாடானை போலீஸாா் 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.