தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, நாள்தோறும் மூலவா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தா்கள் வழங்கிய 1,300 கிலோ அரிசி, 125 கிடாய்களை பலியிட்டு அவற்றை சமைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை திரளான பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று, நோ்த்திக் கடன் செலுத்தினா். மூலவா் தா்ம முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.