ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு
கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மதுரை, விருதுநகா், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் கலந்து கொண்டன. ஒரு காளையை அடக்க 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 மாடுபிடி வீரா்கள் களமிறங்க அனுமதிக்கப்பட்டனா். பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை புதுக்கோட்டை, கமுதி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பாா்வையிட்டனா்.