பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு! கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் ...
அரசரடி பகுதியில் இன்று மின் தடை
மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசரடி துணை மின் நிலையம், பொன்னாகரம் பீடரில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே மேலப் பொன்னாகரம் 2 ஆவது தெரு முதல் 8- ஆவது தெரு வரை, ஆா்.வி. நகா் 1 முதல் 4- ஆவது தெரு வரை, ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம் பகுதி முழுவதும், கைலாசபுரம், அசோக்நகா், அருள்தாஸ்புரம், களத்துப் பொட்டல், தத்தனேரி பிரதான சாலை, பாரதி நகா், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.