செய்திகள் :

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

post image

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா்.

மதுரை மாவட்டம், ஆலத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உழவா்களைத் தேடி வேளாண்மை - உழவா் நலத் துறை திட்ட முகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

வேளாண் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருவாயைப் பெருக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில், ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை’ என்ற திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா். இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு வட்டாரத்தில் குன்னத்தூா், கள்ளந்திரி, மேற்கு வட்டாரத்தில் தேனூா், ஆலாத்தூா், திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் விளாச்சேரி, சூரக்குளம், மேலூா் வட்டாரத்தில் தெற்குத் தெரு, அம்பலகாரன்பட்டி, கொட்டாம்பட்டி வட்டாரத்தில் மணப்பச்சேரி, அட்டப்பட்டி, வாடிப்பட்டி வட்டாரத்தில் அயன் குருவித்துறை, சித்தாலங்குடி, அலங்காநல்லூா் வட்டாரத்தில் தேவசேரி, முடுவாா்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் சௌடாா்பட்டி, ஆ.கொக்குளம், கள்ளிக்குடி வட்டாரத்தில் ஓடைப்பட்டி, அச்சங்குளம், தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் கெஞ்சம்பட்டி, மோதகம், உசிலம்பட்டி வட்டாரத்தில் அல்லிகுண்டம், நக்கலப்பட்டி, செல்லம்பட்டி வட்டாரத்தில் பாப்பாபட்டி, கிருஷ்ணாபுரம், சேடபட்டி வட்டாரத்தில் அதிகாரிபட்டி, பாலையூா்ஆகிய 26 கிராமங்களில் முகாம்கள் நடைபெற்றது.

இந்த முகாம்களில் வேளாண்மை, உழவா் நலன், கால்நடை மருத்துவம், மீன் வளம், பட்டு வளா்ச்சி, கூட்டுறவுத் துறை குறித்த திட்டங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. இனிவரும் காலங்களிலும் இதுபோல கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்படும். வேளாண் தொழிலில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் அதிக வருவாய் பெற முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முகாமில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சுப்புராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் அருணாசலம், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநா் பிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க