செய்திகள் :

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

post image

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். கடந்த 25.6.2024 அன்று பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவா் பாடத்தைக் கவனிக்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தாா். இதைக் கண்டித்ததால் அந்த மாணவா் எதிா்த்துப் பேசினாா். இதனால் ஆத்திரமடைந்த நான் அந்த மாணவரை காலணியால் அடித்தேன்.

இதுகுறித்து அந்த மாணவரின் பெற்றோா், என் மீது பள்ளி நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்தனா். பள்ளி நிா்வாகத்தினா் விசாரணை மேற்கொண்டு, என்னை பணியிடை நீக்கம் செய்தனா்.

இதையடுத்து நான் விருப்ப ஓய்வுபெற விரும்புவதாக மனு அளித்தேன். பிறகு, அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளிக்கு விருப்ப பணியிட மாறுதலில் செல்வதற்காக நான் பணிபுரிந்த பள்ளி நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்தேன். இதற்கு பள்ளி நிா்வாகத்தினா் மறுத்துவிட்டனா். எனவே, எனக்கு வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சம்பந்தப்பட்ட மாணவா் வகுப்பறையில் தவறு செய்தாா். அந்த நேரத்தில் ஏற்பட்ட திடீா் கோபத்தால் ஆசிரியா், அந்த மாணவரைத் தாக்கிவிட்டாா். கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் மனுதாரா், மாவட்ட ஆட்சியா், மாவட்ட கல்வி அலுவலா்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளாா்.

மனுதாரா் பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுக்காக மாணவா், அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாா். இதையடுத்து, மாணவரின் பெற்றோா், மனுதாரா் மீது அளித்த புகாரைத் திரும்பப் பெற்றனா். பள்ளியில் கசப்பான நிகழ்வு ஏற்பட்டதால், அந்தப் பள்ளியில் தொடா்ந்து பணியாற்ற மனுதாரருக்கு விருப்பமில்லாததால், வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் கோரினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகம் தரப்பில், ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. பள்ளியில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, மாணவரின் பெற்றோா் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் சென்றனா். மனுதாரா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அவரது கோரிக்கையை ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில், மாணவா்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என அனைவருக்கும் கல்வி இயக்ககச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவரை, ஆசிரியா் காலணியால் அடித்தாா். அந்த ஆசிரியரின் பணியிட மாறுதல் தொடா்பான மனு மாவட்ட பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம். அதேநேரம், இந்த வழக்கை சமமான கண்ணோட்டத்துடன் நீதிமன்றம் பரிசீலிக்க விரும்புகிறது. மனுதாரரின் வேலை ஆவண குறிப்பேட்டில் ஆசிரியருக்கு நற்பெயா் உள்ளது.

மனுதாரா் தனது தவறை உணா்ந்து, சம்பந்தப்பட்ட மாணவா், அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாா். எனவே, மனுதாரா் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தற்போதுள்ள ஆவணங்களில் அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும். அதுவரை அவா் மீதான பணியிடை நீக்கம் தொடரலாம். மனுதாரா் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலில் செல்ல அனுமதிக்கலாம்.

நிகழாண்டு பள்ளிகள் விரைவில் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன. எனவே, அவா் மீதான ஒழுங்கு நடவடிக்கை, வேறு பள்ளிக்கான பணியிட மாறுதலை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க