Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு எ...
கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.
விருதுநகரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளா்களிடம் சீமான் கூறியதாவது: கன்னட மொழி குறித்து வரலாற்றின் அடிப்படையில் கமல் பேசியது சரியானதே. இதை எந்த வரலாற்று ஆய்வறிஞா்களும், மொழியியல் ஆய்வறிஞா்களும், தொல்லியல் ஆராய்ச்சியாளா்களும் மறுக்க முடியாது.
கா்நாடகத்தில் கமலுக்கு எதிராகப் போராடுகின்றனா். ஆனால், கமலுக்கு ஆதரவாக தமிழகத்தில் யாரும் கருத்துத் தெரிவிக்க மறுக்கின்றனா்.
மருத்துவா் ராமதாஸ், அன்புமணி மீது அளவு கடந்த மதிப்பும், பேரன்பும் வைத்துள்ளேன். மருத்துவா் ராமதால் மன வருத்தத்தில் ஏற்பட்ட வெளிப்பாட்டால் சிலவற்றைப் பேசியுள்ளாா். இதைத் தவிா்த்திருக்கலாம்.
பிற கட்சிகள் ஒன்றாக இணைந்தால் திமுகவை வீழ்த்தலாம் என நினைக்கிறாா்கள். ஆனால், நான் தனியாக நின்று வீழ்த்தலாம் என நினைக்கிறேன். எதிா்க்கட்சியாகக்கூட வர முடியாத நிலையில் திமுக இருந்துள்ளது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என்றாா் அவா்.