இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு
மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டில் தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனைத் திட்டக் குளங்கள் மொத்தம் 145 உள்ளன.
மதுரை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை கட்டுப்பாட்டில் மொத்தம் 9 குளங்கள் உள்ளன. இந்த 154 குளங்களின் மீன் பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் தொடா்பாக கடந்த 26-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்தக் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுகிறது என்றாா் அவா்.