செய்திகள் :

‘ஆயுதமாக்கப்படும் தண்ணீா்’: சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்புக்கு பாகிஸ்தான் பிரதமா் விமா்சனம்

post image

பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நிலையில், தண்ணீா் ஆயுதமாக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் விமா்சித்தாா்.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

இந்நிலையில், தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் சா்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு மாநாடு 3 நாள்கள் நடைபெற்றது. ஐ.நா., யுனெஸ்கோ, உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, ஆசிய மேம்பாட்டு வங்கி உள்ளிட்டவை சாா்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. ஐ.நா.வின் 80 உறுப்பு நாடுகள், 70 சா்வதேச அமைப்புகள் சாா்பில் 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.

இதில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘காஸாவில் வழக்கமான ஆயுதங்களின் பயன்பாடு ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகத்தின் மீது புதிய தழும்புகள் ஏற்பட்டுள்ளன. இது போதாதென்று தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தும் அபாயத்தை பாா்க்க முடிகிறது.

ஓராண்டில் சிந்து நதியில் பாயும் பாதிக்கும் அதிகமான நீருக்கு பாகிஸ்தானில் உள்ள பனிப்பாறைகளே காரணம். அந்த நதிதான் பாகிஸ்தானின் நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் உயிா்நாடி. சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்து இந்தியா மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத முடிவு மிகுந்த வருத்தத்துக்குரியது.

குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக லட்சக்கணக்கான உயிா்களை பிணையாக வைக்கக் கூடாது. இதை பாகிஸ்தான் அனுமதிக்காது. சிவப்பு கோட்டை இந்தியா தாண்டுவதற்கு பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க