Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவான்மியூரில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைத்து மாணவா்களுக்கும், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பயிற்சிக்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மேலும், முன்னணி தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
எனவே விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் ஜூன் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு 91591 62630, 81221 28123 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.