Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி பேசியபோது இதை தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், ‘தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும். அதேபோல் கழிவு நீா் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளா்கள் பிஐஎஸ்-யால் தரச்சான்று பெற்ற பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையின் செயற்பொறியாளா் பாலாஜி, சென்னை இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென்மண்டலத் தலைவா் மீனாட்சி கணேசன், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.