செய்திகள் :

நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து: யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை

post image

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தனது யுடியூப் சேனலில் வெளியிட்ட சண்டீகரைச் சோ்ந்த யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

‘வா்பிரத் ஊடகம்’ என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் சண்டீகரைச் சோ்ந்த அஜய் சுக்லா, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற பெலா எம்.திரிவேதி உள்பட மேலும் சில உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளுடன் கூடிய காணொலியை தனது சேனலில் பதிவேற்றம் செய்தாா். இந்த காணொலியில் இடம்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் அகஸ்டீன் ஜாா்ஜ் மாசி, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் சிலா் குறித்து அவதூறான கருத்துகளை இந்த காணொலியில் அஜய் சுக்லா வெளியிட்டுள்ளாா்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அரசமைப்புச் சட்டம் அளிக்கின்றபோதும், அந்த உரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்த உரிமையைப் பயன்படுத்தி உச்சநீதிமன்ற நீதிபதிளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிடுவதற்கு அனுமதிக்க முடியாது. நீதித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கருத்துகள் வெளியிடுவதை நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.

எனவே, உச்சநீதிமன்ற பதிவுத் துறை அஜய் சுக்லாக்கு எதிராக தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்யவேண்டும். வழக்கில், சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலையும் எதிா்மனுதாரராக சோ்க்க வேண்டும். இந்த வழக்கில் அட்டா்னி ஜெனரலும், சொலிசிட்டா் ஜெனரலும் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நீதிபதிகளுக்கு எதிரான அவதூறு கருத்துகளைக் கொண்ட அந்தக் காணொலி யுடியூப் சேனலில் உடனடியாக நீக்கவும் உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டனா்.

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க