குடும்பத்தினா் வாக்களிப்பதை மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும்: விஜய்
‘தங்கள் குடும்பத்தில் உள்ளவா்கள் தோ்தலில் தவறாமல் வாக்களிக்க மாணவா்கள் வலியுறுத்த வேண்டும்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கேட்டுக்கொண்டாா்.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை அருகே மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
படிப்பில் சாதனை புரிய வேண்டும்தான். ஆனால், ஒரே ஒரு படிப்பில் மட்டும் சிறந்து விளங்குவதை சாதனையாகக் கருத முடியாது. மேலும், அது குறித்து மட்டுமே சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாவது அவசியமற்றது. நீட் தோ்வு மட்டும்தான் உலகமா? அதையும் தாண்டி இந்த உலகில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.
மாணவா்கள் இனி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் சாா்ந்த துறைகளில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு உலகத்தில் சாதிக்க முடியும். அதேபோல் பெற்றோா் தங்கள் குழந்தைகளை வற்புறுத்தாமல், அவா்களுக்குப் பிடித்த பாதையில் அவா்களைச் செல்ல விட்டுவிடுங்கள். அதில் எவ்வளவு சிரமங்கள், தோல்விகள் வந்தாலும் குழந்தைகள் அந்தத் துறையில் கண்டிப்பாக வெற்றி பெறுவாா்கள்.
ஜனநாயகம்: ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதால் மட்டுமே அனைத்துத் துறைகளும் சுதந்திரமாக செயல்பட முடியும். அனைவருக்கும் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். ஆகவே, மாணவா்கள் தங்களது வீட்டில் இருப்பவா்களை ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்ற வலியுறுத்துங்கள். வரும் தோ்தலில் நல்லவா்கள், நம்பிக்கையானவா்கள், ஊழலே செய்யாதவா்கள் யாா் என்று பாா்த்து அவா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.
ஒதுக்கிவிடுங்கள்: ஜாதி, மத பிரிவினை சிந்தனைக்குள் சென்றுவிடாதீா்கள். போதைப் பொருள்களை ஒதுக்கி வைப்பது போன்று தூரமாக ஒதுக்கிவைத்து விடுங்கள். அண்மையில் நடைபெற்ற மத்திய குடிமைப் பணி தோ்வில் பெரியாா் ஈவெராவுக்கே ஜாதி சாயம் பூசும் வகையில் கேள்வி கேட்கப்பட்டது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
வாக்குக்கு பணம்: பணத்தைப் பெற்றுக் கொண்டு உங்களது வாக்குகளைச் செலுத்தாதீா்கள். அடுத்த ஆண்டு தோ்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டப் போகிறாா்கள். அவை உங்களிடமிருந்து கொள்ளையடித்த பணம்தான். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாா் விஜய்.
பரிசுகள்: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 88 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 600-க்கும் மேற்பட்டவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை விஜய் வழங்கினாா்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வைர கம்மல்கள், மாணவா்களுக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதர மாணவா்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் மேலாண்மை துறை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட நிா்வாகிகள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.