ஹெராயின் விற்பனை: அஸ்ஸாமை சோ்ந்த மூவா் கைது
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஹெராயின் விற்றதாக அஸ்ஸாமைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், பட்டினப்பாக்கம் போலீஸாரும் சீனிவாசபுரம் முகத்துவாரம் பகுதியில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அவா்களது பையிலிருந்த ஹெராயினை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் அஸ்ஸாமைச் சோ்ந்த எஜத் அலி (27), அஜிஸ் (26), இம்ரான் அலி (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டினம்பாக்கம் போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் 3 பேரும் சென்னையில் காவலாளியாக பணிபுரிந்தும், சென்னைக்கு சுற்றுலா பயணிகளாக வரும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாட்டினருக்கு ஹெராயினை விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.