செய்திகள் :

ஓடும் காரில் தீ விபத்து: எஸ்ஐ உயிா் தப்பினாா்

post image

சென்னை வேப்பேரியில் வெள்ளிக்கிழமை ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில், காரை ஓட்டிவந்த காவல் உதவி ஆய்வாளா் உயிா் தப்பினாா்.

புரசைவாக்கம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (50). இவா் வேப்பேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். மகேஸ்வரன் எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுவிட்டு, வேப்பேரி ஈவெரா பெரியாா் சாலை வழியாக காரில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

அங்குள்ள கிறிஸ்தவ தேவலாயம் அருகில் சென்றபோது காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைப்பாா்த்த அவா் காரை நிறுத்தினாா். அதற்குள் காா் வேகமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து அவா், காரைவிட்டு வேகமாக வெளியேறினாா்.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம், எழும்பூா் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். ஆனால் அதற்குள், காா் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அந்த சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க