அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் பாஜக தலைவர் மகன் உள்பட 3 பேர் குற்றவாளி; ஆயுள் தண்...
முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!
முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை அம்மா திடலில் கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநிலப் பொதுச் செயலா் இராம. ஸ்ரீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவா் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறியதாவது: மதுரையில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆன்மிகப் பெரியோா்கள், மடாதிபதிகள், அரசியல் பிரமுகா்கள் உள்பட 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்துகொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடிகா்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஜூன் 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 9 மணியளவில் நிறைவுபெறும். இதில் முருக பக்தா்கள் பாதயாத்திரை குழுவினா் சாா்பில், வேல் வழிபாடுகள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, ஹிந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது. பாஜகவினா் தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்லும் போது காவல் துறையினா் தடுக்கின்றனா். முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என்றாா் அவா்.
