செய்திகள் :

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தக் கோரி, விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் ஜமாபந்தி நடத்தப்படுவதால் இந்த மாதத்துக்கான கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன், செயலர் முருகன் மற்றும் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்தனர். தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியல் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜமாபந்தி நடத்தப்படுவதன் காரணமாகத்தான் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் கண்டிப்பாக கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்ட விவசாயிகள், மற்ற மாவட்டங்களில் கூட்டம் நடைபெறும்போது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அலுவலர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரு... மேலும் பார்க்க

ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி

ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இ... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்க... மேலும் பார்க்க