செய்திகள் :

``இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம்; ஆனால், இரவுக்குள்..'' - ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

post image

இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது என்பதை முன்னர் ஒத்துகொள்ளாமல் இருந்த பாகிஸ்தானின் பொய் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவர்களின் வாயில் இருந்தே உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னால், பாகிஸ்தானை இந்தியா தாக்கியது என்று பேசியிருந்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார் ஷெபாஸ் ஷெரீப்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

அஜர்பைஜானில் பேசிய இவர், "மே 9 - 10 நள்ளிரவில், ஃபஜ்ர் பிரார்த்தனைக்குப் பிறகு, நாங்கள் இந்தியாவைத் தாக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதற்கு முன்பாகவே, இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களைத் தாக்கியது" என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது இந்திய ராணுவம். இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா அழித்தது.

ஷெபாஸ் ஷெரீஃப்

இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி எதிர்வினை ஆற்றியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகமானது. பின்னர், மே 10-ம் தேதி இரு நாடுகள் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தன.

ஆனால், அப்போதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது என்பதை ஒத்துக்கொள்ளாத பாகிஸ்தான், இப்போது உண்மையை பேசுகிறது.

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ... மேலும் பார்க்க

"நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்..." - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. "ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கி... மேலும் பார்க்க

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்க... மேலும் பார்க்க

முதல்வர் வருகை; திரைச்சீலையால் மறைக்கப்பட்ட ’அசுத்த’ கால்வாய் - புதுப்பிக்கப்பட்ட சாலைகள்

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திமுகவினர் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாநகரம் அமளிதுமளியாகி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. புதுப்பிக்கப்படும் சாலைகள்நீண்ட கால... மேலும் பார்க்க