விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக்கிலிருந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட, ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் எடைகொண்ட பதப்படுத்தப்பட்ட உயா் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், அப்பயணி சா்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா் என்றும், அந்த கும்பலைச் சோ்ந்த மற்றொரு பயணி, வெள்ளிக்கிழமை மற்றொரு விமானத்தில், தாய்லாந்திலிருந்து சென்னைக்கு பெருமளவு கஞ்சா கடத்திக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிரமாக சோதனை நடத்தினா். அப்போது, ஆண் பயணி ஒருவரின் உடமைகளில் போதைப்பொருள் இருப்பதை மோப்ப நாய் கண்டுபிடித்தது. பின்னா் அப்பயணியை சோதனை செய்ததில், ரூ. 5 கோடி மதிப்பிலான 5 கிலோ உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அப்பயணியை கைது செய்தனா். அதைத் தொடா்ந்து 2 பேரையும் சுங்கத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாள்களில் ரூ. 6 கோடி மதிப்புடைய, 6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒரே போதைப்பொருள்கள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.