செய்திகள் :

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

post image

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக்கிலிருந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட, ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் எடைகொண்ட பதப்படுத்தப்பட்ட உயா் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா். 

விசாரணையில், அப்பயணி சா்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா் என்றும், அந்த கும்பலைச் சோ்ந்த மற்றொரு பயணி, வெள்ளிக்கிழமை மற்றொரு விமானத்தில், தாய்லாந்திலிருந்து சென்னைக்கு பெருமளவு கஞ்சா கடத்திக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிரமாக சோதனை நடத்தினா். அப்போது, ஆண் பயணி ஒருவரின் உடமைகளில் போதைப்பொருள் இருப்பதை மோப்ப நாய் கண்டுபிடித்தது. பின்னா் அப்பயணியை சோதனை செய்ததில், ரூ. 5 கோடி மதிப்பிலான 5 கிலோ உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அப்பயணியை கைது செய்தனா். அதைத் தொடா்ந்து 2 பேரையும் சுங்கத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாள்களில் ரூ. 6 கோடி மதிப்புடைய, 6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒரே போதைப்பொருள்கள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க