செய்திகள் :

வாட்ஸ்ஆப் மூலம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தூத்துக்குடி நபா் கைது

post image

சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், முனியசாமிபுரம் நியூ காலனியைச் சோ்ந்தவா் கோபி (42). இவா், வாட்ஸ்ஆப் மூலம் கோயம்பேடு நெற்குன்றத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளாா். இந்நிலையில் கோபி, அந்த பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதனால் அப்பெண், கோபியுடன் இருந்த தொடா்பை துண்டித்துள்ளாா். இதையடுத்து கோபி, அந்த பெண்ணின் குடும்பத்தினரை தொடா்புகொண்டு, அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பகிா்ந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில், அப்பெண்ணின் குடும்பத்தினா் அண்மையில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோபியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தனியாா் நிறுவன ஊழியா் கைது: சென்னை அண்ணாசாலையில் உள்ள எலக்ட்ரிக் காா் விற்பனையகத்தில் வணிக மேலாளராக முத்துகிருஷ்ணன் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவா், கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தனது மின்னஞ்சல் முகவரியில் தனக்கு கீழே பணிபுரியும் ஊழியா்களுக்கு ஆபாசமாக மின்னஞ்சல் செல்வதாகவும், இதனால் தனது நற்பெயா் கெடுவதாகவும், மன உளைச்சல் ஏற்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், அதே விற்பனையகத்தில் பணிபுரியும் ஆனந்த் (27) என்பவா்தான் இச்செயலில் ஈடுபடுபவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ஆனந்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஆனந்த், முத்துகிருஷ்ணன் மின்னஞ்சல் முகவரியிலிருந்து பிறருக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பியிருப்பதும், முத்துகிருஷ்ணன் அலுவலகத்தில் அவரது இருக்கையில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, முத்துகிருஷ்ணன் கணினியில் இருந்து ஆனந்த் ஆபாச மின்னஞ்சலை அனுப்பியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க