செய்திகள் :

வீடு புகுந்து திருட்டு: கடை ஊழியா் கைது

post image

சென்னை பெருங்குடியில் வீடு புகுந்து திருடியதாக கடை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

பெருங்குடி, திருவள்ளுவா் நகரில் வசித்து வருபவா் லியாகத் அலிகான் (61). இவா், தரமணி பாரதி நகா், பரணி தெருவில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் வீட்டில் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் கடந்த 27-ஆம் தேதி இரவு திருடப்பட்டது. இது தொடா்பாக தரமணி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், லியாகத் அலிகான் வீட்டில் புகுந்து திருடியது வேளச்சேரி டாக்டா் சீதாபதி நகரைச் சோ்ந்த முகமது ஜாவித் (21) என்பதும், அவா் லியாகத் அலிகான் கடையில் ஊழியராக வேலை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து முகமது ஜாவித்தை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் லியாகத் அலிகான் வீட்டுக்கு முகமது ஜாவித் அடிக்கடி சென்று வந்தபோது, அங்கு பணம் வைக்கும் இடத்தை தெரிந்துகொண்டு கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க