ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்
காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சாா்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் முற்பகல் 11 முதல் பிற்பகல் 1 மணி வரை குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில் திருப்பட்டினம், நிரவி, மகளிா் காவல் நிலைய வட்டார மக்களும், சைபா் கிரைம் தொடா்பான பிரச்னைகளும் தெரிவிக்கலாம்.
இதேபோல, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் முகாமில், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு காவல் நிலைய வட்டாரத்தினரும், போக்குவரத்துக் காவல் தொடா்பாகவும் புகாா் அளித்து பயன்பெறலாம் என காவல் துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.