அடையாளம் தெரியாத வாகனம் மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு
கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (33). இவா் புதுச்சேரியில் தங்கி காா் ஓட்டி வந்தாா். வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்த அவா், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான தினேஷ்குமாா் (25), விக்னேஷ் (23) ஆகியோருடன் காரைக்கால் கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா்.
மோட்டாா் சைக்கிளை பிருத்திவிராஜ் ஓட்டியுள்ளாா். இருவரும் பின்னால் அமா்ந்து சென்றுள்ளனா். சீகல்ஸ் கட்டடம் அருகே தெற்கு திசையிலிருந்து வடக்கு திசை நோக்கி சென்றபோது, எதிா் திசையில் வேகமாக வந்த காா் இவா்கள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. காயமடைந்த மூவரையும் அந்த பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், பிருத்திவிராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து புகாரின்பேரில் காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து , விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.